உத்திரபிரதேச மாநிலத்தில் 3 அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆத்தியநாத்தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசம்கர் மாவட்டத்தில் தியோகான் பகுதியில் உள்ள 3 அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பவன் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது
மிர்ஸா, அதம்பூர், ஸ்ரீகந்த்புரம் மற்றும் பரம்பூர் ஆகிய 3 கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உள்ளூர் காவல்துறை மூலம் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சேதப்படுத்தப்பட்ட சிலைகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அவர் தெரிவித்துள்ளார்.